எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 4-ம் தேதி முதல்...
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர ஓட்டலில்...
சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்தார். அந்த வகையில் த.வெ.க. கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூச்சி முருகன் சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு கடிதத்தை வழங்கினார்.
த.மா.கா. - இ.கம்யூ.....
அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க.தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு சென்று பூச்சி முருகன் அழைப்பு கடிதம் வழங்கி உள்ளார்.
அழைப்பு கடிதங்கள்...
மற்றொரு தி.மு.க. தலைமை நிலையச்செயலாளரான துறைமுகம் காஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச்செ செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய. கட்சித் தலைவர் ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் மற்றும் நெல்லை முபாரக், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, ஜான்பாண்டியன் உள்ளிட்ட தலை வர்களின் கட்சி அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதங்களை வழங்கினார்.
60 கட்சி தலைவர்கள்...
மேலும் இன்னொரு தலைமை நிலையச் செயலாளரான ஆஸ்டினும் அழைப்பு கடிதங்களை வழங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி. டி.வி.தினகரன், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம், பொன்குமார், பஷீர் அகமது உள்ளிட்ட 60 கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
3 பேருக்கு மட்டும்...
அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர்களுக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடக்கப்பட வில்லை என்று தி.மு.க. தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர். த.வெ.க. தலைவர் விஜய் தி.மு.க. மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ஆர்களா? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.


