எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1,177 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் ரெயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 272 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் (மாநில நெடுஞ்சாலை எண் 15) (கி.மீ 123-153/6) 30.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்ட கோபி - ஈரோடு சாலை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 221 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை 23-1) (கி.மீ 4/5-20/925) 16.425 கி.மீ நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 197 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை –66) (கி.மீ. 3/6-8/6) 5.0 கி.மீ நீளத்திற்கும் மற்றும் (கி.மீ 13/9-கி.மீ 23/8) 9.90 கி.மீ நீளத்திற்கும் தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் - மன்னார்குடி சாலை, திருவள்ளூர் மாவட்டத்தில் 111 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 7/0-18/4) 11.40 கி.மீ நீளத்திற்கு இரு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கொரட்டூர் - தின்னனூர் - பெரியபாளையம் சாலை மற்றும் 82 கோடி ரூபாய் செலவில் (கி.மீ.7/0-16/2) 9.20 கி.மீ நீளத்திற்கு இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட திருவள்ளூர் - அரக்கோணம் சாலை, திருநெல்வேலி மாவட்டத்தில் 65 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் (கி.மீ 0/0-6/049) 6.049 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.
முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் 60 கோடி ரூபாய் செலவில் (கி.மீ 6/8-14/8) 8.0 கி.மீ நீளத்திற்கும், 62 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 14/8-21/0) 6.20 கி.மீ நீளத்திற்கும் மற்றும் 63 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 21/0-27/6)6.60 கி.மீ நீளத்திற்கும் (மாநில நெடுஞ்சாலை-140) இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் சாலை முதல்வர் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 41 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் திருப்பரங்குன்றம், மதுரை - திருமங்கலம் சாலைப்பகுதி (மாநில நெடுஞ்சாலை- நகர்பகுதி எண்.101); கி.மீ.2/550- 3/750-ல் வலதுபுறத்தில் உள்ள தென்கால் கண்மாய் கரைவழியாக 1.20 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட இருவழிச்சாலை, வேலூர் மாவட்டத்தில் 35 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கூடநகரம் - அனங்காநல்லூர் சாலையில் கி.மீ 3/0-ல் ரெயில்வே கி.மீ. 160/2-4ல் உள்ள கடவு எண்.67-க்கு மாற்றாக மேலாலத்தூர் - வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், லட்சுமி அம்மாள்புரம் - நாவிதம்பட்டி சாலையில் கி.மீ 0/2-ல் ரெயில்வே கி.மீ. 168/12-14ல் உள்ள கடவு எண்.72-க்கு மாற்றாக மேல்பட்டி - வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே 35 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம் 1,248 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் இரு சாலை மேம்பாலங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.


