Idhayam Matrimony
முகப்பு

கால் ஆணி | குதிகாலில் வலி | முள் வெளியேற | யானைக்கால் வியாதி குணமாக எளிய சித்த மருத்துவ குறிப்புக்கள்

new

  1. யானைக்கால் வியாதி ;-- வல்லாரை  இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
  2. கண்ணாடி குத்திய காயம் ;--ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும்.
  3. கால் ஆணி போக ;--மருதாணி,மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.
  4. கால் ஆணி  குணமாக ;-- வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.
  5. கால் ஆணி வலி தீர ;--மஞ்சள்,வசம்பு சிறிதளவு கற்பூரம்,மருதோன்றி இலை ஆகியவற்றை அரைத்து கட்டி வரலாம்.
  6. கால் ஆணி ;-- சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம்.
  7. குதிகாலில் வலி ;-- தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் இடலாம்.
  8. யானைக்கால் வியாதி;-- வல்லாரை இலைப்  பொடியை காலை,மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.
  9. யானைக்கால் வீக்கம் ;--காக்கிரட்டான் விதை தூள்,இந்துப்பு,சுக்கு தூள் ஆகியவற்றை கலந்து 3 கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.
  10.  யானைக்கால் நோய் குணமாக ;-- வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.
  11. யானைக்கால் வீக்கம் குணமாக ;--  காக்கிரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்ட வீக்கம் குறையும்.
  12. யானைக்கால் நோய் ;-- பசுவின் சிறுநீரும்,மஞ்சள் தூள்,வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் வராது தடுக்கலாம்,வந்த நோயும் குணமாகும்.
  13. முள் வெளியேற ;-- எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஒடிந்து உள்ளே இருந்து வெளி வந்து விடும்.
  14. முள் வெளியேற ;-- கள்ளிப்பால் அல்லது எருக்கன் பாலை முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும்  வெளியேறி  விடும்.
  15. கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்;-- வாழைப்பழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள் ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony