முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 3 மே 2024      உலகம்
Pak 2024-05-03

Source: provided

பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. 

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த பேருந்தில் குறைந்தது 30  பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து