எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, January 20, 2025 to Sunday, January 26, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய்மாமனுக்கு நன்மை ஏற்படும். தொலை தூரம் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். பிணிகள் குறைந்து, சுபிட்சம் உண்டாகும்.
பரணி -- இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மருத்துவம், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் சுபச் செய்திகள் வர மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவியல் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவார். அதனால் அவர்களின் பெற்றோர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமாகும் மற்றும், அற்புதமாகவும் இருக்கும். எல்லாம் சாதகமாகவே அமையும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. சிலர் வீட்டிலேயே இருக்க நேரும். அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். பண விஷயமான சிந்தனைகள் எழும். சிலர் காவல்துறை பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். செய்யும் தொழிலில் தடைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகள் மூலம் தொல்லை ஏற்படலாம். குழந்தைகள் மூலம் அவமானமும், மனக்கலக்கம் ஆகியவை ஏற்படலாம். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். சிலருக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் நிலவும்.
ரோகிணி – இந்த வாரம் ஆன்மீக வாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. சிலருக்கு தூக்கமின்மையால் சுறுசுறுப்பற்ற தன்மை நிலவும். குடும்பத்தில் அமைதியின்மையும் நிலவும். மாணவர்களுக்கு முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீர்கள். ஆனால், அவர்கள் தரும் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கும். நகமும், சதையுமாக இருந்த நண்பர்களே பகைவர் ஆவர்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். அரசுத் துறைகளில் பெண் ஊழியர்கள் கை ஓங்கும். வியாபாரிகளுக்கு அரசால் வியாபார தடைகள் ஏற்படும். சில வீட்டு விஷயங்களில் குடும்பத்தினரிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம். அந்த நேரங்களில் ஒற்றுமையே பலம் தரும். ஆயினும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். பூஜா வழிபாடுகளும், பெரியோர் ஆசிகள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சில வியாபாரிகள், பொருட்களை அதிக விலைக்கு விற்று இலாபம் காண்பர்.
திருவாதிரை --- இந்த வாரம் பெரியவர்கள் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். கற்பனை வளம் பெருகும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வார்கள். பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்தில் பிரிந்த உறவுகள் ஒன்று சேருவதால் மகிழ்ச்சி ஏற்படும். கல்வியில் சில தடைகள் ஏற்படும். சிலர், வீட்டை விட்டு வெளியில் சென்றால் வழக்குகளை சந்திக்க நேரலாம். கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி தாங்கமுடியாது. உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு குறையும். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தி திறன் அதிகரித்து இலாபம் பெருகும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வீட்டில் அனைவருடனும் பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சி நிலவும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் சுகானுபவங்கள், கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களின் நன்மை ஏற்படும். சிலருக்கு தொழில் முன்னேற்றங்கள் தடைப்படும். புத்தக வெளியீட்டாளர் களுக்கு சுமாரான காலம். தீய நண்பர்களின் சகவாசத்தால் சிலரின் மனம் தீய வழிமுறைகள் நாடும். எனவே, கவனம் தேவை. சிலருக்கு தேவையற்ற காரணங்களால் அரசுக்கு அபராதம் செலுத்த நேரலாம். சிலருக்கு உறவுகளுக்குள் ஒற்றுமை இன்மையால் மனக்குறைகள் ஏற்படலாம்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வீட்டிலேயே இருக்க நேரும். சிலருக்கு, வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற தாமதங்கள் ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்காமல் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். திடீரென ஏற்படும். பயணங்களால் தொல்லைகள் எழும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். துவக்கத்தில் கையில் எடுக்கும் காரியங்களில் எல்லாம் தடை, தாமதங்கள் ஏற்படும். பின்னர், வேலைகளை முடிக்க தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தனவரவுகள் குறையும். நல்ல வகையான உணவு வகைகளை உட்கொள்வார்கள்.
அஸ்தம் – இந்த வாரம் குடும்பத்தில் மிக மிக முக்கியமான பெரியவர்கள் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். தொழில், வேலை வாய்ப்புகள் குறையும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. சிலருக்குக் காரியத்தடைகள் , கால தாமதங்கள் ஏற்படும். பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். செலவைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் இருந்தாலும், எதிர்பாராத தன வரவுகள் காண கடுமையாக உழைக்க வேண்டியது வரும். அரசுத்துறை மூலம் எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்தும் தாமதப்படும் சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமையைக் கடைப் பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைந்தாலும், திருமணம் தாமதமாகும். சிலர், வீட்டில் இருப்பதால் மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். வாகன வசதி குறையும். அரசுப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பயணங்கள் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும். பணிபுரிவர்களுக்கு வேலையில் சிரத்தையும், மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியும் உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
திருவோணம்- இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்திப் பெருக்கினால் ஞானத் தன்மை எய்துவார்கள். வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. வாணிபத்தால் தனலாபம் கிடைப்பது அரிதாகும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு பயன்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் தொலைதூரப் பயணங்கள் செல்வதை ஒத்திப் போடுவது நல்லது. வலைத்தளம் மூலம், உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவுப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஒத்திப் போடுவது நல்லது. அவை பின்னர், வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை ஒத்திப் போடுங்கள். சிலருக்கு வருமான வாய்ப்புகள் குறையும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். காவலர்களால் சிலருக்கு தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
பூசம் -- இந்த வாரம் பெரியவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப வீட்டில், பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். நல்லவர்களின் தொடர்பு இல்லை என்றால் வீண் குழப்பங்கள் ஏற்படலாம். உணவருந்தவும் நேரமின்றி உழைக்க வேண்டியது வரும். சிலருக்கு வெளி வேலைகள் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். அப்படி உண்ணும் உணவும் வாய்க்கு ருசியாக கிடைக்காது. அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள் அடிக்கடி, புதிய உத்தரவுகளை பிறப்பிப்பார். பங்குச் சந்தையில் இலாபமும், போட்டி பந்தயங்களில் ஆதாயமும் குறையும்.
ஆயில்யம் – இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனைகள் காரணமாக மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியாத நிலை உருவாகும். அரசுப் பணியாளர்களுக்கு, மேலதிகாரிகளின் ஆணைகள் காரணமாக, நிம்மதி குறையும். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். உங்களுக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு, வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைகளும் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் உதவி இருக்காது.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சிலருக்கு அதிக ஓய்வு கிடைக்கும். சகோதரரால் நன்மைகள் உண்டு. எனவே, கோபத்தை அடக்கி அவர்களுடன் ஒத்துப் போவது நல்லது. நண்பர்களுடன் வெளியே சுற்ற முடியாத நிலை ஏற்படலாம். பணமுடைகள் ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு இருக்காது. சாண் ஏறினால், முழம் சருக்கும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு பொறுப்புகள் அதிகம் ஆகி, வேலைகள் கூடும்.
பூரம் – இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டிலேயே இருக்க நேரும். மகிழ்ச்சி பொங்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதமாகும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமற்ற உத்தரவுகளை எதிர் கொள்வீர்கள். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வரவு செலவுகளில் தேக்க நிலை காணப்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தாமதப்படும். சிலருக்கு தள்ளியும் போகலாம். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆயினும், எதிர்பார்த்த அளவு தனவரவுகள் கைக்கு வந்து சேராது. பணத்தை தரும காரியங்களுக்கு செலவு செய்ய நேரும். விருந்துகளில் கலந்து கொள்ள நினைத்தாலும், போக முடியாத சூழ்நிலை உருவாகும். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயம் இராது.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் உண்டு. தொழில் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் தாமதப்படும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அவர்கள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். புதிய முயற்சிகள் பண வருமானம் அதிகரிக்கும்.
சுவாதி – இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு வாகனங்களில் செல்லும் போது பிரச்சனைகள் எழலாம். அரசு உத்தரவுகளை மதிப்பது உங்களுக்கு நல்லது. சிலருக்கு, பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் காண இயலாது. விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்க பொழுதைக் கழிக்க நினைத்தாலும் முடியாத நிலை ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தாமதப்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலர் வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்ய நேரலாம். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். எப்போதும் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் வீட்டில் இருப்பதால், அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, பொழுதை கழிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி தாமதப்படும். புது வீடு கட்டிக் குடியேறும் காலம் தாமதமாகும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் தாமதப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் குடும்பத்தார் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்க முயன்றாலும் கடன் தாமதப்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு குறைவாக உண்டு. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும்.. வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
ரேவதி- இந்த வாரம் மனைவியை மகிழ்விக்க, புதிய ஆடைகள், ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்து அசத்துவார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கைநிறைய முன் பணம் பெற்று மகிழ்வர். தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனை கண்ட பனி போல விலகும், சிலருக்கு வருமான வரி பிரச்சனைகள் தலைதூக்கலாம் எனவே, கம்பெனி கணக்குகளை சீராக எழுதி வைக்கவும். இல்லையெனில் சிக்கல்களைச் சந்திக்கலாம். வந்தபின் ஓடுவதை விட, வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம். வீட்டில் பிடிவாதங்களை தளர்த்தினால் பிணக்குகள் தீரும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் சுகமும், எதிர்பார்த்த பணவரவுகளும் குறையும். வீட்டில் இருப்பதால், குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள்.
பூராடம் – இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட தாமதமாகும். வெளியூர் பயணங்கள் தாமதப்படும். வீட்டிலேயே இருப்பதால், செலவுகள் குறையும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். நண்பர்களை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும். விர மாணவர்கள் அன்றன்றைக்கு தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி நிலையாக இருக்காது. சிலருக்குப் பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தி குறையும் வாய்ப்பு ஏற்படலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் தாமதப்படும். வீட்டில் இருப்பது, மகிழ்ச்சியை வரவழைக்கும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மூலம் உதவிகள் தடைப்படும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பு எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும் மனோபயம் நிலவும்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் நிம்மதி ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சிலர், தனிமையில் உழல நேரலாம். வீட்டில் உறவுகளோடு, மகிழ்வதோடு, இருப்பதால், உள்ளம் மகிழும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு பணி அமைவதில் தாமதம் நிலவும். சிலருக்கு, தாமதமாகவே, நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்பு தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்வர். தேர்வுகள் தாமதமாகலாம்.
அனுஷம் – இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் என்று சொல்வதற்கில்லை. தொழிலில் சுமாரான, வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் புதிய உத்தரவுகளால், பணிப்பளு அதிகரிக்கும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். உறவுகளுடன் சிறப்பான உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்குப் பணமுடை காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். திடீர்ப் பயணங்கள் மூலம் தொல்லைகள் ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் உடன்பிறப்புகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் தாமதமாகும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் தடை, தாமதங்கள் உண்டாகும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். சில சமயங்களில், புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை. அதிகார பதவிகளில், அமைச்சர் போன்ற பதவிகளில் சிலருக்கு இடைஞ்சல்கள் ஏற்படலாம். தங்கள் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.
சதயம்- இந்த வாரம் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். வீட்டில் இருப்பதால் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க இயலாது. பிறரிடம், வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் தாமதப்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. தொழிற்சாலையில் புதிய எந்திரங்களை நிர்மாணிப்பது, தாமதமாகும். உங்கள் பணியின் வழிகளில் மலர்களின், முட்களும் மாறி மாறி வரும். அதன் பிறகு, முன்னேற்றம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சற்று விலகி இருப்பார். சுபகாரியப் பேச்சுக்கள் தாமதப்படும். புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் குறையும். சிலருக்கு, அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் சிலருக்கு தாமதமாகவே கிடைக்கும். சிலருக்குத் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். சமயோஜிதமாக செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். சிலருக்கு, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மத்திய அரசுக்கு தமிழக கவர்னர் ரவி பாராட்டு
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் : சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சு
19 Jan 2025சென்னை : கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேசினார்.
-
பெண் மருத்துவர் கொலை வழக்கு: எனது மகனை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்: சஞ்சய் ராய் தாய்
19 Jan 2025கொல்கத்தா : தனது மகனை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக, பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயார் ஆத்திரத்துடன் தெரிவித்த
-
மே முதல் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்
19 Jan 2025சென்னை : மே மாதம் முதல் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து : முதல்வர் ஆதித்யநாத் நேரில் ஆய்வு
19 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 60 பேர் பலி
19 Jan 2025அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கட்சியில் இருந்து நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளா
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் தாமதம் எதிரொலி: காசாவில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 19 பேர் பலி
19 Jan 2025காசா முனை : போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் இஸ்ரேல் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
-
மருத்துவ சிகிச்சை பெற ஜக்ஜித்சிங் ஒப்புதல்: உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட 121 விவசாயிகள்
19 Jan 2025சண்டிகர் : ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு
19 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க.
-
பணய கைதிகளின் பட்டியல் வழங்க வேண்டும்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
19 Jan 2025கெய்ரோ : பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என்று நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jan 2025சென்னை : தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
ம.பி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை
19 Jan 2025போபால் : அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்தத்து வீட்டுக்காரர் அடித்து கொல்லப்பட்டார்.