முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Sucharita-Mohanty 2024-05-0

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி தன்னிடம் இல்லை என்றும், இதனால் சீட்டை திருப்பி கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 21 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற 13-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை அங்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அங்குள்ள பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுசரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். 

இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் அருப் பட்நாயக்கும், பா.ஜ.க. சார்பில் சம்பித் பத்ராவும் போட்டியிடுகிறார்கள். 

இந்த நிலையில் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி தன்னிடம் இல்லை என்றும், இதனால் சீட்டை திருப்பி கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சுசரிதா மொகந்தி கூறியதாவது:-

எனக்கு கட்சியில் இருந்து நிதி மறுக்கப்பட்டது. சட்டசபை தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பா.ஜ.க.வும், பிஜு ஜனதா தளமும் பண மழையில் நனைந்துள்ளன. எங்கும் செல்வமாக காணப்படுகிறது. 

பிரச்சார செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன். நான் மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் முடியவில்லை. இதற்கு கட்சி பொறுப்பல்ல. பா.ஜ.க. அரசு கட்சியை முடக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து