முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-2 தேர்வானவர்களுக்கு 29ம் தேதி கலந்தாய்வு

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஏஒ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து