முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கன்ன சுருக்கங்களை வைத்து பொய் சொல்வதை கண்டு பிடிக்கும் கருவி

போலீஸாரின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையை கூறவில்லை என்றால் லை டிடெக்டர் என்ற கருவி மூலம் மருத்துவ ரீதியாக உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். பெரும்பாலான நாடுகளில் இந்த முறைக்கு அனுமதி கிடையாது. இது அந்த நபரின் அனுமதியின்றி மருந்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பலத்த எதிர்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை கழக பேராசிரியர் டினோ லெவி என்பவர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது பொய் சொல்பவரின் கன்னங்களில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அதிர்வுகளை கணக்கிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். இந்த தசை சுருக்கங்களை முன்பு எந்த சென்சராலும் கண்டறிய முடியவில்லை, ஆனால்,ஒரு இஸ்ரேல் நிறுவனத்துக்கு தனது புதுமையான எக்ஸ்ரோடு கருவியை விற்ற பேரா.யேல் ஹனைன் என்பவரின் கருவி இதை மிகச் சரியாக கணித்துள்ளது. சுமார் 75 சதவீத வெற்றியை இது அளித்துள்ளதாக அந்த குழுவினர் கூறுகின்றனர். இதற்காக முகத்தில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர்களில் இருக்கும் எக்ஸ்ரோடுகள் இவற்றை கணித்து சொல்லிவிடும் திறன் படைத்தவையாக உள்ளன. இனி வழக்கு விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என நம்பலாம்.

தெரிந்தும் தெரியாதது

ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான முட்டாள்கள் நாளின் உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை. புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது.

கல்லறையிலும் வந்து விட்டது க்யூ ஆர் கோட்

கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது க்யூ ஆர்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த க்யூ ஆர்-கோட் பயன்படுகிறது. தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா இனி நீங்கள் மயானத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீழ் புதையுண்ட நபரின் வாழ்க்கை குறித்த வீடியோவை காணலாம். அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு  செய்து படிக்க முடியும். இனி இறந்தவர்கள் டிஜிட்டல் முறையில் நம்முடன் பேசும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பணமே இல்லையாம்

சிங்கப்பூரில் 61 சதவீதத்தினரும், நெதர்லாந்தில் 60 சதவீதத்தினரும், பிரான்ஸில் 59 சதவீத மக்களும்,  ஜெர்மனியில் 33 சதவீதத்தினரும், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து கின்றனர். எனவே மேலே கூறியுள்ள நாட்டிற்குச் செல்லும் போது ரூபாய் நோட்டுகள் பற்றி கவலைப்படாமல் சென்று வரலாம்.

6.6 கோடி ஆண்டுகள் சிதையாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு கண்டுபிடிப்பு

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும். ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago