முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆயுளை கூட்ட

நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

இறைச்சியைத் தவிர்க்கனுமாம்

நாம் உண்ணும் இறைச்சி உணவு வகைகளை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியுமாம். இதுகுறித்த புதிய ஆய்வில் மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகைளை உண்பதால் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG)அளவை குறைக்கும் என தெரிவிக்கிறது. ஒரு வேளை அமெரிக்கர்கள் தொடர்ந்து இறைச்சியை விட பீன்ஸ் உண்டால் 2020ம் ஆண்டுக்குள் 50 முதல் 75 சதவிகிதம் வெப்பமயமாதல் குறைவதை உணர முடியுமாம். மேலும், வெப்பமயமாதலை குறைக்க ஆட்டோமொபைல் சாதனங்களை குறைப்பது, அதன் உற்பத்தியை நிறுத்தவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இதன் மூலமாகவே எளிதாக குறைக்கலாமாம். அமெரிக்கர்கள் இறைச்சியை வாங்க ஆர்வம் காட்டும் அளவுக்கு காய்கறிகளை வாங்குவதில்லை.

ஹேக்கர் உஷார்

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

சீறிப்பாயும் சிறுத்தை

ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என வேகமாக ஓடும் திறன் கொண்டது சிறுத்தை. இந்த வேகத்திற்கு காரணம் அதன் உடலமைப்பு, வால் பகுதி, இதயம், பெரிய நுரையீரல் ஆகியவையாம். மேலும், அதன் வளையும் தன்மை கொண்ட முதுகுத் தண்டும், தட்டையான விலா எலும்பும். இவை இரண்டும் கால்களை வேகமாக இயக்க செய்ய உதவுகின்றன.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago