Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு தொகை : வித்தியாசமாக அறிவித்த நகர் எது தெரியுமா?

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார்  இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் விலை உயர்ந்த கார் Bugatti La Voiture Noire விலை ரூ. 140 கோடி

புகாட்டி லா வொய்ச்சர் நொயர் உலகின் விலை உயர்ந்த கார் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு  கார்களை மட்டுமே உருவாக்குவது புகாட்டியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். தற்போது ஒரே ஒரு நொயர் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, அது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. முதலில் 2019 இல் மற்றொரு கார் தயாரிப்பு முடிந்து விடும் என குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி காரை உருவாக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு261 மைல் வேகம், மற்றும் 2.5 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஏறக்குறைய புயலை போல சீறிப் பாயக் கூடிய இந்த காரில் உலகில் உள்ள அனைத்து கார்களை காட்டிலும் அதிகமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும் வரிக்கு முன்பாக காரின் உள்ளடக்க விலை 12.4 மில்லியன் டாலர் என்றும் வரிகளுடன் 18.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.140 கோடி என்று சொல்லப்படுகிறது. அம்மாடியோவ்...

புகைபிடிப்பதை கைவிடுவது எப்படி

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம். புகை பழக்கத்தை விட சில யோசனைகள்...காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகவேண்டும். அதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், "சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்ற உங்கள் இலக்கை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம் உங்கள் உள் மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் இச்சை அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். தண்ணீர் குடிக்கவும், இப்படிச் செய்வதால் உங்கள் கவனமும், இலக்கும் ஒன்றிணையும்.இஞ்சி மற்றும் நெல்லிக்காயை இடித்து காயவைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை ரசம் மற்றும் உப்பு சேர்த்து, அதை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். சிகரெட் புகைக்கவேண்டும் என்று தோன்றும்போது, இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையை சாப்பிடவும். இதைத்தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இது புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும்.

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago