எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். தக்க பயிற்சிகளின் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். சரியில்லாத நினைவாற்றல் என்று ஒன்று இல்லை. நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நமது நினைவாற்றலுக்கு மூளை இன்றியமையாதது. ஏந்த ஒரு மருந்தோ மூலிகையோ மூளைத்திறனை அதிகப்படுத்திவிடாது. தவறான மருந்துகள் நினைவாற்றலை பாதிக்கத்தான் செய்கின்றன.
நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல்.
நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று கூறுவார்கள். ஆனால் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவில் கொள்ள ஞாபக சக்தியை அதிகப்படுத்த வேண்டும். மனித மூளை 75 சதவீதம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும் மற்றும் நுகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது நமது மனதில் குறைந்த நேரமே இருக்கும். உடனே மறைந்துவிடும். இதை நினைவில் கொள்ள ஆர்வத்துடன் கவனமாக செயல்படவேண்டும். திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்து ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்கவேண்டும். இதனால் நமது உடல்சோர்வு ஏற்பட்டு மூளையின் செயல் குறைந்துவிடும். அதிகநேரம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கவும் கூடாது. இதனால் நமது மூளையின் திறன் அல்லது கற்கும் திறன் குறைந்து உடல் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. சிறிது நேரம் உடல்பயிற்சி மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் முடியும். மெது ஓட்டம் மற்றும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் அதிகப்படும். இவ்வகையான உடல்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் தினமும் சிறிது நேரம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
நல்ல சூழ்நிலைகளில் வாழ்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகப்படவும் வாய்ப்புள்ளது. நினைவாற்றலை அதிகப்படுத்த நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. இரவு நேர தூக்கத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரும். மேலும் நினைவாற்றலும் 30 முதல் 40 சதவிகிதம் அதிகமாகிறது.
ஒரு செயலை செய்வதற்கு விருப்பமும் ஆர்வமும் இருக்க வேண்டும். எழுத்துக்களை பார்த்து மனதில் பதியவைப்பதைவிட படங்களை பார்த்து மனதில் பதிய வைப்பது மிகவும் எளிது. மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை கவனமாக செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நினைவாற்றல் அதிகப்படும்.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு
1. தன்னம்பிக்கை,
2. ஆர்வம்,
3. செயல் ஊக்கம்,
4. விழிப்புணர்வு,
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம் ஆகியவை காரணமாக இருக்கின்றன.
1. தன்னம்பிக்கை : என்னால் பாடங்களை நன்றாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2. ஆர்வம் : எந்த ஒரு விசயத்தையும் ஆர்வத்துடன் கவனித்தாலோ அல்லது செயல்பட்டாலோ நமது நினைவில் நன்றாக பதியும். மேலும் ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு நினைவில் பதியவைத்தால் நமது மனதில் நன்றாக பதியும்.
3. செயல் ஊக்கம் : இந்த பாடங்களை அல்லது விசயங்களை ஏன் கற்க வேண்டும், எவ்வகையில் இவை நமக்கு பயன் தரும் என்று நம்மோடு அந்த விசயங்களை இணைத்துக்கொண்டு செய்தால் நம் மனதில் நன்றாக பதியும்.
4. விழிப்புணர்வு : மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும்
5. புரிந்துகொள்ளல் : புரிந்துகொண்டு செய்யும் செயல்கள் நம் மனதில் நன்றாக பதியும். மாணவர்கள் பாடங்களை புரிந்துகொண்டு படித்தால் நினைவில் நன்றாக நிற்கும்.
6. உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க சில உணவு முறைகள் : தினமும் உணவில் சீரகம் மற்றும் மிளகு கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் ஆகியவை உள்ளது. ஆகையால் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும் நரம்புகளைப் பல்பபடுத்திக்கொள்ளவும் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பப்பாளிப்பழம், நெல்லிக்காய், வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதால் நினைவாற்றல் பலப்படும். அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிடுவதால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
தொகுப்பு: கே.சுரேஷ், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ