எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருவல்லிப்புத்தூர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை பார்ப்போம்!
அன்றாடம் நாம் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் மனதில் நிம்மதி இல்லை அதனால் இரவில் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. இறைவன் எனக்கு எல்லா வசதிகளைத் தந்தும் நிம்மதியைத் தரவில்லையே என்று புலம்புவதைக் கேட்கிறோம். நிம்மதி என்பது கடைச் சரக்கா? விலை கொடுத்து வாங்குவதற்கு. தினமும் கூலி வேலை செய்து அன்றாடம் ரூ. 200 சம்பாதிக்கும் ஒருவன் நான் நிம்மதியாக வாழ்கிறேன். அன்றாடம் என் கடமையைத் தவறாமல் செய்கிறேன். தர்மம் செய்கிறேன். சேமித்தும் வைக்கிறேன். அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான். என் தாய், தந்தைக்கு உணவு கொடுத்து என் கடமையை ஒழுங்காகச் செய்கிறேன். என்வீட்டில் விதவையான தங்கையையும் அவளது பிள்ளையையும் பராமரித்து என்னால் இயன்ற தர்மத்தை செய்கிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளை வளர்த்து எனது எதிர்காலத்திற்கான சேமிப்பையும் செய்து நானும் என் மனைவியும் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான்.
நிம்மதியைத் தேடிச் சென்றவரிடம் ஒரு மகான் கூறினார். மனிதா உன் மனதிற்கு சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிஞ்சா உன் நிம்மதி போய்விடும் என்றார். மனம் தேவையில்லாத சமயங்களில் தேவை இல்லாத சுமைகளைச் சுமப்பதும் இன்னொரு காரணம். ரயிலில் ஓடி வந்து ஏறியவன் தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தான். ரயில் புறப்பட்டது. ஆனாலும் தன் மூட்டையை தலையில் இருந்து இறக்கவில்லை. காரணம் கேட்டபோது வேணாங்க, இந்த ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும், என்சுமையை நானே சுமந்துக்குவேன் என்றானாம். இது என்ன பைத்தியக்காரத்தனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரிதான் பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளணும். தேவை இல்லாதவற்றை மனதில் சுமையாக ஏற்றக்கூடாது.
எப்போதும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளைச் சொன்னார்கள். உஷத்காலம் எனப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, இரு உள்ளங்கைகளையும் பார்த்து, பொறுமையின் சிகரமான பூமாதேவியை வணங்கி, நேற்று எனக்கு நல்ல தூக்கம் தந்து உதவினாய் இன்று காலையில் உன்னருளால் விழித்து எழுந்தேன். இன்றைய நாளில் நான் நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், பிறருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழவும் என்னுடன் இருந்து வழி நடத்துவாயாக என்று இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று மறுக்காமல் வேண்டியதை அருளுவான். நன்றாகத் தெளிவாகப் பேசுங்கள்.
பேசியபடி நடந்து காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் முடிந்துபோன விஷயங்களைப் பற்றி எண்ணி வருந்தாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் சிறு குழுந்தைகளைப் போல வாழ்க்கையை நேசித்து அனுபவித்து வாழுங்கள். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்போம் நடலையல்லோம்! ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்! என்று அப்பர் சுவாமிகள் அருளியதைப் போன்று வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று நம்முன்னோர்கள் அருளியபடி தனிமையாக இருந்து இறைவனை தியானித்து மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
தினமும் ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, அதற்கு மேல் உண்பவன் ரோகி என்றார்கள் ஞானிகள். வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள் வயிற்றில் கால்பாகம் காலியாக இருக்கட்டும். கண்ட நேரத்தில் தூங்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மனதில் உறுதியையும், அமைதியையும் நிரப்புங்கள் எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளை கண்டு பதட்டப்படாதீர்கள். மனதை அமைதியான நிலையில் வைத்து அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போரில் எதிரிகளால் சுற்று வளைக்கப்பட்ட விஷயத்தை ஜெர்மன் படைத்தளபதி சொன்னதும், சிறிதும் பதட்டமின்றி சிரித்துக் கொண்டே மிகவும் நல்லது இனி நாம் எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்றாராம் ஹிட்லர்.
இது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிகழ்வு. எனவே எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று தேடியலையாமல் அந்த நிம்மதி நம் மனத்தினுள்ளே தான் உள்ளது என்பதை உணர்ந்து வாழ்வோம் மன அமைதி அடைவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
சாத்விக்-சிராக் முன்னேற்றம்
18 Nov 2025ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.


