முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போளூர் எடுபார்க் பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

போளூர் எடுபார்க் பள்ளியில் உலக மகளிர் தினவிழா அறக்கட்டள தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.அறக்கட்டளை பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தார். அனைவரையும் ஆசிரியை மேரிபாலா வரவேற்றார்.

மகளிர் தினவிழா

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நர்சரி பள்ளிகளின் உதவித்தொடக்க கல்வி அலுவலர் பவானி கருணாகரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

போளூர் பேருராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் தின சிறப்புரையாற்றினார்.லயன்ஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், பள்ளி தாளாளர் ஃபவுசியா தபசும், ஆசிரியர்கள் வேல்முருகன்,,கீதன்குமார்,,மாணவர்கள் மகளிர்தினம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி மாணவிகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. நம் நாட்டில் அனைத்து துறைகளிலிம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பெண்மணிகளான இந்திரா காந்தி,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தெரசா, கல்பனா சாவ்லா உள்ளிட்ட பலரது வரலாற்றைக் கூறி அனைவரது கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.கலந்துகொண்ட பெண்களுக்கிடையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து