எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து வரும் 15-ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று (ஜன. 8) 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று டெல்லி எல்லைகளில் முகாமிட்டு இருந்த விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் டெல்லியின் புறநகர் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.
இதில் 3500-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சாலைகளில் பேரணியாக அணிவகுத்தன. இதில் அரியானாவில் இருந்து மட்டுமே 2,500-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த பேரணி 4 முக்கிய பகுதிகளில் நடந்தது. சிங்கு எல்லையில் இருந்து திக்ரி எல்லைக்கும், திக்ரியில் இருந்து குண்ட்லி நோக்கியும், காஜிப்பூர் எல்லையில் இருந்து பல்வாலை நோக்கியும், ரேவாசனில் (அரியானா) இருந்து பல்வாலை நோக்கியும் விவசாயிகள் இந்த மாபெரும் பேரணியை நடத்தினர்.
டிராக்டர்களில் தேசியக்கொடிகள், தடதடக்கும் ஜெனரேட்டர்கள், பஞ்சாபி மொழியில் ஒலித்த பாடல்கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுந்தன. பேரணியில் சென்ற விவசாயிகள் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள் என பெரும் தயாரிப்புடன் கலந்து கொண்டனர். இந்த பேரணியை முன்னிட்டு சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் பாதுகாப்புக்காக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பேரணியில் பங்கேற்காத பெண்கள், வயதான விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கான உணவு, மருந்து உள்ளிட்டவை வழக்கம்போல அங்கு வழங்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.