முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் விடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள், ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்களும் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. ஆனால் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், அவர்கள் இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை நாளன்று பணியாற்றியதற்கு ஈடு செய்யும் விதமாக, ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம், அந்த விடுப்பை இந்த மாதத்திற்குள் எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து