முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தொடர்பாக, துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனது வீட்டில் இருந்தே தொடர்ந்து எனது பணிகளை தொடருவேன். டெல்லி நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன்என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து