எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது இத்தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ள இக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதுதான் விந்தையிலும் விந்தை.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு 36.30 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வுக்கு 33.29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பிடித்துள்ள கட்சிதான் சீமானின் நாம் தமிழர் கட்சி. இவரது கட்சிக்கு 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 6.85 சதவீத வாக்குகள் கிடைத்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி 29.58 லட்சம் வாக்குகள் பெற்றும் கூட சீமானின் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். காரணம், இவரது கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் வந்துள்ள காங்கிரஸ் கட்சி 100 ஆண்டு பாரம்பரியம் உள்ள கட்சி. அந்த கட்சிக்கு 19.06 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது இக்கட்சிக்கு 4.41 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனால் இந்த கட்சி கிட்டத்தட்ட 17 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. சீமானின் கட்சியை விட 10 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் கூட காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதிகளை வென்றுள்ளது. 5-ம் இடத்தை பிடித்துள்ள பா.ம.க. 17.45 லட்சம் வாக்குகள் பெற்று 4.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் 6-ம் இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 ஆகும். இக்கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 2.73 சதவீதம் மட்டுமே. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 2.47 சதவீத வாக்குகளை பெற்று 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இவரது கட்சி பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 ஆகும். கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45 சதவீத வாக்குகளை பெற்று 8-ம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
இவரது கட்சி பெற்றுள்ள வாக்குகள் 10.58 லட்சம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.17 சதவீத வாக்குகளை பெற்று 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 5.04 லட்சம். ஆனால் இந்த கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க. 1.13 சதவீத வாக்குகளை பெற்று 10-ம் இடத்தையே பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 979 ஆகும். ஆனால் இந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் வெறும் 1.06 சதவீதம் மட்டுமே. இவரது கட்சி 4.57 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற இடம் 4 தொகுதிகள். இப்படி சீமானின் கட்சியை விட பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் மேற்கண்ட கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன. ஆனால் கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றும் கூட சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது விந்தையிலும் விந்தை.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. படுபாதாளத்திற்கு சென்று விட்டது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 0.45 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழகம் முழுவதும் இந்த கட்சிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது விஜயகாந்த் கட்சிக்கு கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இப்போது 0.45 சதவீதம் என்ற அளவுக்கு விஜயகாந்த் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்தது அவரது தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அரியானாவில் 2 முறை நிலநடுக்கம்
17 Jul 2025சண்டிகர், அரியானாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.