முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என அறிவித்தால் வரவேற்போம் : அமைச்சர்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என அறிவித்தால் வரவேற்போம் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழகத்தில் தற்போது 1,060 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. இது சென்னையில் மட்டும் தான், மற்ற 37மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை. தமிழகத்திற்கு இன்றுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வந்துள்ளது. இதுவரை 97 லட்சத்து 62 ஆயிரத்து 957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது, ஆனால் நாங்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தடுப்பூசி மையத்திற்குச் சென்று, ஏமாற்றம் அடைவார்கள். எனவே மக்களிடம் தடுப்பூசி குறித்து உண்மையைச் சொல்வது நல்லது. 

ஜூன் மாதத்திற்கு மத்திய அரசு 37 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது, அதில் ஜூன் 13 க்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, மாநிலத்திற்கு 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்துள்ளது, இதை மாவட்டங்கள் அனைத்திற்கும் விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 'தமிழகத்தில் தொற்றுநோய் பரவுவது குறைந்து வருகிறது. 

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வெளியிட முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், பா.ஜ.க தலைவர் மத்திய அரசோடு பேசி நீட் இல்லை என்று அறிவித்தால் மகிழ்ச்சிதான். 37 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. பேரிடருக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. 9.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து