முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் அடுத்த முதல்வராக சுக்ஜிந்தர் ரந்த்வா தேர்வு செய்யப்பட வாய்ப்பு?

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு கசப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் பதவி விலகினார். 

 இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.  சித்துவையோ, அவரது ஆதரவாளர்களையோ முதல்வராக  நியமித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், சித்து தரப்பினரை முதல்வராக முன்மொழிந்தால், அமரிந்தர் சிங் போர்க்கொடி தூக்குவார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.  காங்கிரஸ் மூத்த தலைவரான அம்பிகா சோனியும் முதல்வர் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார்.  

இதனால், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கட்சியின் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

 

இந்த நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.  3 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா, அமரிந்தர் சிங் கேபினட்டில் சிறைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து