எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால் பெரும்பாறை - சித்தரேவு மலைச்சாலையில் ராட்சத பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூம்பாறையில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. பாறைகள் விழுவதையடுத்து கொடைக்கானல் சாலையில் சுற்றுலாப்பயணிகள் இரவுப்பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழைக்கு, கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை - சித்தரேவு மலைச்சாலையில் ஏணிக்கல் என்ற இடத்தில் திடீரென 2 ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் கிரேன் மூலம் பாறைகளை சுற்றியிருந்த மண் சரிவினை அகற்றி சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதையை சரிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பாறைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மஞ்சள்பரப்பு - பெரும்பாறை இடையே சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரத்தினை பொதுமக்கள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். கொடைக்கானல் மேல்மலையில் உள்ள பூம்பாறை பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்பே போக்குவரத்து சீரானது.
கனமழை காரணமாக மேலும் பல இடங்களிலும் மரங்கள், பாறைகள் சாய்ந்து விழுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் மலைச்சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகளிடம் வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.


