எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர் சுமார் 7 லட்சம் பேர் மீண்டும் சென்னை திரும்புவதற்கு இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு சுமார் 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
சென்னையில் இருந்து 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு மொத்தம் 8126 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3½ லட்சம் பேர் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர ரெயில்கள் மற்றும் கார்கள் மூலமாகவும் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு 4,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கும் வசதியை செய்துள்ளது. இன்று முதல் 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் எளிதாக சிரமமின்றி திரும்பி வர இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சென்றுள்ள சுமார் 7 லட்சம் பேர் திரும்பி வருவதற்காக இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பஸ்களில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு 6,612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 4 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (திங்கட்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 5,655 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளை 18-ம் தேதி தினசரி பஸ்களான 2,100 பஸ்களுடன் கூடுதலாக 3,214 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 19-ம் தேதி 2,100 தினசரி பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 1,540 பஸ்கள் இயக்கப்படும். மொத்தத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 16,709 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா கட்டுப்பாடு காரணமாகவும், 18-ம் தேதி தைப்பூசம் காரணமாகவும், 19-ந் தேதிக்கு பிறகு திரும்பி வர பலர் திட்டமிட்டு உள்ளனர். எனவே 19, 20-ந் தேதிகளில் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அப்படி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களில் இருந்து பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னைக்கு மக்கள் திரும்புவார்கள். இது போன்ற பண்டிகை காலங்களின்போது பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலையில் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் 4 ஆம்னி பஸ்கள் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பெருங்களத்தூர் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் அங்கு மட்டும் சாலை குறுகலாக இருப்பதால் அந்த இடத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று அதிகாலையில் 50 காவலர்கள் அங்கு நிறுத்தப்பட உள்ளனர். அவர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகளவில் நெரிசல் ஏற்பட்டால் கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து படப்பை, வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும். பெருங்களத்தூரில் இறங்கி பெரும்பாலான வர்கள் தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள்.
இதுபோன்று மக்களின் வசதிக்காக சிறப்பு மாநகர பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுஇருக்கிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் பயணம் செய்யலாம். இதன் மூலம் அங்கிருந்து ரெயில், பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் தங்களது இருப்பிடங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.