முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜகார்தா கடலில் மூழ்கி வருவதால் புதிய தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றும் இந்தோனேசியா

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

இந்தோனேசியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தலைநகருக்கு நுசான்தாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றத்தால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மிக வேகமாக கடலில் மூழ்கி வருகிறது. இதனால் போர்னியோ தீவிற்கு தலைநகரை மாற்ற கடந்த 2019-ம் ஆண்டு அதிபர் விடோடோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பெருந்தொற்றால் இதற்கான நடைமுறை தொடர்வதில் தாமதம் நிலவி வந்தது.

இந்த நிலையில் தலைநகரை மாற்றும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய தலைநகருக்கு நுசான்தாரா என்று அதிபர் ஜோகோ  விடோடோ பெயர் சூட்டியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோவில் 2 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தலைநகர் அமைய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து