முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தனியார் அலுவலகங்களில் முக‌க்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் தனியார் அலுவலகங்களில் முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், 300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி தமிழகத்தில் தினசரி பாதிப்பு 23,888-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பணியிடங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை தனியார் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை சோதனை செய்ய வேண்டும். 300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவேண்டும். பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும். பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து