முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பம்: சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார் துணை முதல்வராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
30-Ram-1

Source: provided

மும்பை: பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இவர்களுக்கு கவர்னர் கோஷ்யாரி பதவிப்பிராமணம் மற்றும் ரகசிய காப்பு பிராமணமும் செய்து வைத்தார்.

உரிமை கோரினர்....

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் இரவு ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் கவர்னர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் கவர்னர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். 

புதிய முதல்வராக....

பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மகாரா்ஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என நேற்று மாலை தேவேந்திர பட்னாவிஸே அறிவித்தார். இந்தநிலையில், மகாரா்ஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகாரா்ஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

மராத்தி மொழியில்... 

நம்பிக்கை வாகெடுப்பில் தோல்வியை தவிர்க்க முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மகாரா்ஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். பால் தாக்கரே பெயரை குறிப்பிட்டு மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். மகாரா்ஷ்டிரா மாநில துணை முதல்வராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என பட்னாவிஸ் அறிவித்த நிலையில் பா.ஜ.க. உத்தரவை ஏற்று பதவி ஏற்றுக்கொண்டார். 

ஆட்டோ ஓட்டுநர்...

1964-ல் பிறந்த ஏக்நாத் ஷிண்டே பள்ளிப்படிப்பை கூட முழுமையாக முடிக்காமல் ஆட்டோ ஓட்டி வந்தார்.  பால்தாக்கரே மீது கொண்ட் அதீத ஈர்ப்பு காரணமாக 1980-ல் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் படிப்படியாக வளர்ந்த ஏக்நாத் ஷிண்டே 2004-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2009-ல் மந்திரி பதவி தர காங்கிரஸ் முன் வந்த போதும் அதை நிராகரித்து சிவசேனாவில் இருந்தார் ஷிண்டே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து