முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமாக முடிந்த சிகிச்சை: கே.லோகேஷ் ராகுல் தகவல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
30-Ram-58jpg

Source: provided

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 5-வது டெஸ்டிலும் அவரால் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.எல். ராகுல். ஜெர்மனியின் மியூனிக்கில் இருந்து அவர் கூறியதாவது:

கடந்த சில வாரங்கள் கடினமானதாக இருந்தன. ஆனால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. காயம் குணமாகி வருகிறது. காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான பயணம் தொடங்கி விட்டது. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

________________

மார்கனின் ஓய்வு இங்கிலாந்து 

அணியை பாதிக்கும்: ஆர்ச்சர்

கடந்த செவ்வாயன்று, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் இயன் மார்கன். ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் தலைசிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்வதற்கு முக்கியப் பங்களித்த மார்கனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து ஊடகத்தில் மார்கன் பற்றி அவர் தெரிவித்ததாவது:

மார்கனின் ஓய்வு அறிவிப்பு நான் எதிர்பாராதது. உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் பெரிதாகப் பங்களிக்க முடியாததால் அணியிலிருந்து விலகுவது இதுவே சரியான நேரம் என அவர் நினைத்துள்ளார். நான் அப்படி நினைக்கவில்லை. மற்றவர்களும். அவரது அறிவிப்பு இங்கிலாந்து அணியை பாதிக்கும் என்றார்.

_________________

புதிய அணி, புதிய கேப்டன்:

ஆச்சர்யபடும் ஆண்டர்சன்..!

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் தலைமையில் விளையாடும் இங்கிலாந்து அணி தனக்கு ஆச்சர்யம் தருவதாக 39 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் விளையாடுகிறது.

புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் தலைமையில் விளையாடும் இங்கிலாந்து அணி பற்றி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் நாங்கள் 300 ரன்களை விரட்டும்போது (2-வது டெஸ்டில் 50 ஓவர்களில் 299 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி) ஓய்வறை மிகவும் அமைதியாக, இலக்கை விரட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையுடன் இருந்தது. இப்படியொரு ஓய்வறையில் நான் இருந்ததே இல்லை. 20 வருடங்களாகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நான் இதுபோன்று பார்த்ததே இல்லை என்று ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

_________________

சென்னையில் ஜூலை 5-ம் தேி

முதல் தேசிய குத்துச்சண்டை

இளையோருக்கான 5-வது தேசிய ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 33 மாநில பிரிவுகளைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து மகளிர் பிரிவில் 12 எடைப் பிரிவிலும், ஆடவர் பிரிவில் 13 எடைப் பிரிவிலும் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில்லோஷினி (சென்னை), பூவிதா (புதுக்கோட்டை), மதுமிதா (திருவள்ளூர்), ஜீவா (புதுக்கோட்டை), ஸ்நேகா (திருச்சி), மாலதி (புதுக்கோட்டை), அனுசுயா (காஞ்சிபுரம்), ஸ்ரீநிதி (சென்னை), எம்.மதுமிதா (திருவள்ளூர்), ஜெயஸ்ரீ (திருவள்ளூர்), அபிநய சரஸ்வதி (திருவள்ளூர்), பிரிஸ்கிலா (கன்னியாகுமரி) ஆகியோர் பல்வேறு எடைப் பிரிவில் களமிறங்குகின்றனர்.

_________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து