முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஆட்சேர்ப்பு குறித்த புடினின் அறிவிப்பு: வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் மக்கள்: விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
Russian-Airlines 2022--09-2

Source: provided

மாஸ்கோ : ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புடின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷ்யாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.

மேலும் ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட ரஷ்ய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புடின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

புடினின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புடின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷ்யாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். ரஷ்யாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷ்ய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று பார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து