முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் : வேல்முருகன், திருமாவளவன் பங்கேற்பு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Velmurugan-Thirumavalavan 2

Source: provided

சென்னை : மத்திய அரசை கண்டித்து இன்று கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். 

சென்னை கவர்னர் மாளிகை அருகே இன்று மதியம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா. முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணு கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் கவர்னரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து