எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹேமில்டன் : முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றிப்பெற்றே ஆக வேண்டிய சூழலில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா தோல்வி...
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கட்டாயத்தில்...
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் இன்று (27-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் மாற்றம்?
முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. அந்த அளவுக்கு பந்து வீச்சில் பலவீனத்தை காண முடிந்தது. 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே. இதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், யசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே ரன்களை அதிகம் கொடுக்காமல் நேர்த்தியாக பந்து வீசினார்.
வெல்லும் ஆர்வத்தில்...
தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்த வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றே தெரிகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், பிலிப்ஸ், கான்வே, சவுத்தி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
காலை 7 மணிக்கு...
இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி 'டை' ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு
28 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினாார்.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
28 Jan 2026சென்னை, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் விஜய் தந்தை
28 Jan 2026சென்னை, தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இ
-
தமிழ்நாட்டில் பா.ஜ. ஆதரவு சக்திகளுக்கு வாக்கு இல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சு
28 Jan 2026நெல்லை, த.வெ.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
அஜித் பவார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Jan 2026சென்னை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
28 Jan 2026சென்னை, தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 7.85 லட்சம் நிதியுதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
28 Jan 2026சென்னை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு: விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை: மம்தா பானர்ஜி
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் இரங்கல்
28 Jan 2026புதுடெல்லி, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கைக்கடிகாரம், ஆபரணங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட அஜித் பவார் உடல்
28 Jan 2026மும்பை, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகை
28 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகிறது.
-
விமான விபத்தில் டெல்லியை சேர்ந்த இரு விமானிகள் பலி
28 Jan 2026புனே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர் , ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்தனர்.
-
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து விசாரணை துணை முதல்வர் ஷிண்டே அறிவிப்பு
28 Jan 2026மும்பை, அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்
-
விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி நேரில் பார்த்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
அஜீத் பவார் மறைவு எதிரொலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.
-
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை ஜனாதிபதியின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர


