முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Palani 2023 02 04

Source: provided

பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

நேற்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. 

பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர். 

பக்தர்களின் அரோகரா... அரோகரா. முழக்கம் விண்ணை பிளந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு இருந்ததால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. 

ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.  பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து