எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன். அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம். இவ்வாறு மோடி கூறினார்.
________________
16-வது ஓவருக்கு முன்பு சி.எஸ்.கே. ஆட்டத்தை நிறுத்த காரணம் என்ன?
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை வீசுவதற்கு முன்னர் ஆட்டத்தை சில நிமிடங்கள் நிறுத்தியது. அந்த சமயத்தில் கேப்டன் டோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் கள நடுவர்களுடன் கலந்து பேசி இருந்தனர். அப்போது கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹார், மஹீஷ் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது 4 ஓவர்களை முழுவதுமாக வீசி இருந்தனர். பதிரனாவுக்கு 3 ஓவர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவுக்கு 2 ஓவர்கள் எஞ்சி இருந்தன.
அதனால் டோனி, 16-வது ஓவரை வீசும்படி பதிரனாவை அழைத்தார். ஆனால், கள நடுவர்கள் கிறிஸ் கஃபேனி மற்றும் அனில் சவுத்ரி அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனெனில், அதற்கு முன்னர் சுமார் 9 நிமிடங்கள் பதிரனா, களத்துக்கு வெளியில் இருந்ததாக தெரிகிறது. இது ஐபிஎல் ஆட்ட விதிகளில் அடங்கும். விதி எண் 24.2.3-ன் படி ஒரு வீரர் 8 நிமிடங்களுக்கு மேல் ஆட்டத்தின்போது களத்துக்கு வெளியில் இருந்தால் அவர் நேரடியாக போட்டியில் பந்து வீச முடியாது. அவர் வெளியில் இருந்த நேரத்தை களத்தில் மீண்டும் செலவிட்ட பிறகே பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
________________
ஜடேஜாவுக்கு தூதுவிடும் பெங்களூரு ரசிகர்கள்
‘டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள்’, ‘உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும்’, ‘அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை’ என தொடர்ச்சியாக நடப்பு சீசனில் சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் டுவீட் செய்துள்ளார். இதில் கடைசியாக அவர் செய்த ட்வீட், நேற்று குஜராத் அணியுடனான வெற்றிக்குப் பிறகு செய்தது. ஆட்டத்தில் Most Valuable Player என்ற விருதை அவர் பெற்றதும் இப்படிச் சொல்லி இருந்தார்.
இந்தச் சூழலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் ‘நம்ம வீட்டுக்கு வாங்க’ என சாலமன் பாப்பையா சொல்வது போல ‘ஆர்சிபி-க்கு வருக’ என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு சொல்லி வருகின்றனர். ‘அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார்’, ‘மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா. ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்’, ‘டோனியின் நிழலில் இருந்து டூப்ளசி, அஸ்வின் போல வெளியேறுங்கள்’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம்’ என சில டுவீட்கள் வலம் வருகின்றன. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியிலேயே விலகினார் ஜடேஜா. அதன் பிறகு அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் சென்னை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


