முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Doctor 2023-05-31

Source: provided

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இயங்கி வருகிறது. மிக முக்கிய மருத்துவமனையாக உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். 

அதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவத்துராக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் கூறி மருத்துவமனை, வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நரம்பியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து