எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த தலைமை நிர்வாக அதிகாரி எலினா நார்மன் (வயது 49) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகளாக பதவி வகித்த எலினா நார்மனுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பளம் நிறுத்தி வைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் எலினா நார்மன் குற்றம்சாட்டினார். தனது முடிவு குறித்து எலினா நார்மன் மேலும் கூறியதாவது:-
சம்பளம் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த வாரம் அதற்கு தீர்வு கிடைத்தது. ஹாக்கி இந்தியாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலைவர் திலீப் திர்கேவும் நானும் இருக்கிறோம். அங்கே செயலாளர் போலாநாத் சிங், செயல் இயக்குநர் சி.டி.ஆர். ஆர் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் உள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை சமாளித்து என் பணியை செய்வது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
_________________________________________________
டி20 போட்டிகளில் அதிவேக சதம்
முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
_________________________________________________
அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா
விதர்பா மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகத்தை வெளியேற்றியது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகம் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து.
இதன் மூலம் கர்நாடகம் 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விதர்பா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்ஷ் துபே மற்றும் ஆதித்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது விதர்பாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில் பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்த நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்த டெல்லி அணி 14.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. உபி வாரியர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
_________________________________________________
நியூசிலாந்து முன்னணி வீரர் ஓய்வு
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் (வயது 37). இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். வரும் 29ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் நீல் வாக்னெர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு முடிவை அடுத்து வாக்னெர் கூறும்போது, இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
13 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Jan 2025சென்னை : சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
வண்டலூர் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு தடை
13 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2025சென்னை : தமிழகத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
13 Jan 2025சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பிரட்டனில் 166 மி. ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
13 Jan 2025லண்டன் : பிரிட்டனில் சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸி., தென் ஆப்பிரிக்கா, ஆப்கன் அணிகள் அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு தேதிகள் மாற்றம்
13 Jan 2025சென்னை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.