எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.
மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். விழாவில் நீலகிரி கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது. வாயிலின் நுழைவு வாயில் பல வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு, ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும், பல வண்ண மலர்கள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளது.
பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு காட்சியளிக்கிறது. இது தவிர பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் 10 நாட்களும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதே போல் ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று ரோஜா கண்காட்சி தொடங்கியது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரோஜா பூங்காவில் பல ஆயிரம் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரக்கூடிய வகையில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வனவிலங்குகளை காக்க வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுஎருமை, சிங்கம் உள்பட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட மலை ரயில், அலங்கார வளைவுகளை கண்டு ரசித்தனர்.
இதே போல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர். வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அவர்கள் அதன் அருகில் சென்று அதனை தொட்டு பார்த்தும், அதன் முன்பாக நின்று புகைப்படமும் எடுத்தனர்.
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களும் கண்காட்சியை காண பூங்காவுக்கு திரண்டு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்1 day 18 hours ago |
ஆனியன் ரிங்ஸ்4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 1 day ago |
-
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
02 Jun 2024தென்காசி : குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஓரளவு கொட்டியதை தொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
-
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பயணிகள்
02 Jun 2024சென்னை : வருகிற 10-ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
-
தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது : நடிகர் கமல்ஹாசன் பேச்சு
02 Jun 2024சென்னை : தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது என்பதே என் எண்ணம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
02 Jun 2024தருமபுரி : நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் திகார் சிறை சென்றார் கெஜ்ரிவால் : ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என பேட்டி
02 Jun 2024புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக 21 நாட்கள் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதற்கு நன்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
இசைஞானி இளையராஜாவின் 81-வது பிறந்த நாள்: திரை பிரபலங்கள் வாழ்த்து
02 Jun 2024சென்னை : இசைஞானி என சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா நேற்று தனது 81-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
-
பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
02 Jun 2024சென்னை : மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.
-
மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது : காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
02 Jun 2024பாட்னா : மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்
02 Jun 2024பாங்காக் : உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் நாளை தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
02 Jun 2024சென்னை : சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், நாளை வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு
-
பஞ்சாபில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : லோகோ பைலட்டுகள் 2 பேர் படுகாயம்
02 Jun 2024சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் நேற்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரயிலின் லோகோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர
-
தண்ணீர் தாருங்கள்: உ.பி, அரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
02 Jun 2024புதுடெல்லி : கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டெல்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரியான
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2024
02 Jun 2024