முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு பாலம் விழுந்தது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Bihar 2024-07-03

பாட்னா, பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு பாலம் சரிந்து விழுந்துள்ளது. 

 வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது. 

இந்த நிலையில் அராரியா மாவட்டத்தின் போர்பேஸ்கஞ்ச் தொகுதியில் உள்ள அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. 

கடந்த 2008-2009 காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், 2017-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் 2021ல் புனரமைக்கப்பட்டு 2022-ம் ஆண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

புனரமைப்பு பணிகள் நடந்து 2 ஆண்டுகளிலேயே மீண்டும் அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் சரிந்த விவகாரத்தில் 15 பொறியாளர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து பாலங்கள் சரிந்து விழுந்து இருப்பது பெரும் சர்ச்சையாக உருமாறியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து