முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பெய்து வரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      உலகம்
Sri-Lanka-Heavy-rain-2024-1

கொழும்பு, இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 2.30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம். மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராணுவமும், கடற்படையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து