எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள திருமாவளவன், கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது நான் இப்போது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்றைக்கு நம்மளோட தான் இருக்கிறது" என்று கூறி இருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு பதிலடியாக திருமாவளவன் கூறுகையில், "தி.மு.க. அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் சென்னையில் உள்ள வி.சி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். மேலும் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே, விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை.. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என்றெல்லாம் நினைப்பதில்லை.
கூட்டணி நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெளிவாக உள்ளது. கூட்டணி விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பின்பற்றுமாறு சிலர் அறிவுரை கூறுகின்றனர். எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்றாமல் தடுப்பதில் வி.சி.க.வின் பங்களிப்பு முக்கியமானது. கூட்டணி, தேர்தல் எல்லாம் வி.சி.க.வின் முக்கியமான நோக்கம் இல்லை. திருமாவளவன் தடுமாறுகிறார், பின்வாங்குகிறார் என சிலர் கூறுகின்றனர் வி.சி.க.வின் சுயமரியாதையை, தன்மானத்தை, கருத்தியலை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது" என்று திருமாவளவன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இங்கி. தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
18 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்படனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
யுவராஜ் தந்தை பாராட்டு
18 Jan 2025சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னா
-
போலீசார் முதலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அண்ணாமலை
18 Jan 2025சென்னை : சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் காவல்துறை முதலில் ஈடுபடவேண்டும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவரானார் தேஜஸ்வி யாதவ்
18 Jan 2025பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
18 Jan 2025தெஹ்ரான் : ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.
-
ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார் ரோகித்
18 Jan 2025மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து கோலி, கே.எல்.ராகுல் விலகல்..?
18 Jan 2025மும்பை : காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியா வருகிறார் டொனால்ட் டிரம்ப்
19 Jan 2025நியூயார்க் : 47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் : சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சு
19 Jan 2025சென்னை : கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேசினார்.
-
ஈரோடு கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கட்சியில் இருந்து நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளா
-
காசாவில் போர் நிறுத்தம் அமலானது: 3 பணய கைதிகளின் பெயர்களை வெளியிட்டது ஹமாஸ் அமைப்பு
19 Jan 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்ட வெளியிட்டுள்ள நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மத்திய அரசுக்கு தமிழக கவர்னர் ரவி பாராட்டு
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jan 2025சென்னை : தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.