முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஏப்.1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

April-1 2022 04 02

ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்