எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, நவ.- 19 - நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் 2 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீர் என்று அணுமின் நிலையத்தில் எதிர்த்து கூடங்குளம் சுற்று வட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் எரிபொருள் நிரப்பும் பணி தாமதமானது. இதனால் திட்டமிட்டப்படி மின் உற்பத்தி தொடங்க வில்ல. இதற்கிடையே அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை போலீசார் சமாளித்து முடிவுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அணு உலையில் யுரோனியம் எரிபொருள் நிரப்பும் நடந்து முடிந்து விட்டது. மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ந நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணு உலையில் கடந்த அக்டோபர யுரோனியம் நிரப்பி பரிசோதனை தொடங்கப்பட்டது. உலக அளவிலான அணுசக்தி வல்லுனர்கள் இதை பார்வையிட்டு அனுமதி அளித்துள்ளனர். மேலும் நமது நாட்டின் அணு பாதுகாப்பு கழக வல்லுனர்களும் பார்வையிட்டு அனுமதி வழங்கி உள்ளனர். அதை தொடர்ந்து ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் மேற்பார்வையில் வெப்ப காற்று செலுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிந்து அனேகமாக டிசம்பர் மாதம் 15-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும். 100 சதவீத மின் உற்பத்தியை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் கிடைக்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் 450 மெகாவாட் தமிழகத்திற்கு வழங்கப்படும். 37.5 மெகாவாட் புதுவைக்கும், 122 மெகாவாட் கேரளாவுக்கும், 225 மெகாவாட் கர்நாடகாவுக்கும் அனுப்பப்படும். மீதம் உள்ள மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும். இதில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர் 1000 மெகாவாட் மின்சாரமும் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது பற்றி நான் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று தான் கூறினேன். 2-வது அணு உலையில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 3 அல்லது 4 மாதத்தில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கும். அதில் 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகும். அப்போது தமிழகத்திற்கு 2 அணு உலைகளிலும் சேர்த்து 950 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். புதுவைக்கு 67 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டுள்ளதால் ரஷிய அதிபர் புதினை வைத்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதின் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் டெல்லியில் இருந்த படி பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


