முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.22 - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நேற்று வாபஸ் பெறப்பட்டது. தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுக்கு கேஸ் ஏற்றி செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து கேஸ் டேங்கர் லாரிகள் உரிமையாளர்களுடன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சென்னையில் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தென் மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், சங்க தலைவர் பொன்னம்பலம் மற்றும் கார்த்திக் தலைமையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள ஆயில் என்.பி. பவனில் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. வாடகை நிர்ணயம் செய்வதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பேச்சுவார்த்தை முடிவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்