எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாநகரில் உள்ள வால்மார்ட் அலுவலகத்தை இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு:-
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை, பன்னாட்டு நிறுவனங்களை மத்திய அரச அனுமதித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையை கைப்பற்றவும், வேலைவாய்ப்பைப் பறிக்கவும், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கவுமே வழிவகுக்கும். எனவே, இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம், அண்ணாநகரில் தனது வணிக அலுவலகத்தை திறந்துள்ளது. திருவேற்காடு பள்ளிக் குப்பத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அந்த நிறுவனம் அமைத்து வருகிறது. சில்லரை வியாபாரிகளை அணுகி அனைத்து பொருட்களையும் குறைந்த விலை, கடன் வசதி, விரும்பிய இடத்தில் விநியோகம் உள்ளிட்ட பலவற்றைச் சொல்லி உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. ஜனவரி முதல் வியாபாரத்தை தொடங்கவும் உள்ளது. சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவையும் மீறி இத்தகைய அத்துமீறல் நடந்து வருகிறது.
இதனை கண்டித்தும், வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் நேற்று (டிச.26) இந்த போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மேற்கு போக்குவரத்து பணிமனை அருகே இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவிற்குள் வந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கும் வகையில் கட்சி ஊழியர்கள் வேடமிட்டு வந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் கருத்துப்படங்களை கொண்டு வந்திருந்தனர். வால்மார்ட் அலுவலகத்தை நோக்கி பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர்கள், கட்சி ஊழியர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் தா.பாண்டின் தலைமையில் ஊர்வலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடி, போலீசாரின் 6 பாதுகாப்பு வளையங்களையும் உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி, வால்மார்ட் அலுவலகம் அமைந்துள்ள ஏ.வி.கே.டவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இளைஞர்கள் அமெரிக்க கொடியை எரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
சில்லரை வணிகம் செய்யவில்லை; சில்லரை வணிகர்களுக்கு மொத்தமாக பொருட்களை வழங்குகிறோம் என்று வால்மார்ட் நிறுவனம் புது விளக்கம் தருகிறது. சில்லரை வர்த்தகத்தில் தந்திரமாக நுழைகிறது. திருவேற்காட்டிலிருந்தும், அண்ணாநகரிலிருந்தும் வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதனை வலியுறுத்தி இந்த மகத்தான முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. வால்மார்ட் நிறுவனத்தை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் ஓயாது. இந்தியாவில் எங்கு வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடைகள் திறந்தாலும் அதனை எதிர்த்து இடதுசாரிகள் போராடுவார்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.சீனிவாசன், என்.குணசேகரன், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கே.செல்வராஜ் (திருவள்ளுர்), மோகனன் (காஞ்சிபுரம்) சிபிஐ தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.தியாகராஜன், மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ராணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026


