முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் குண்டு வெடிப்பு: 80 பேர் உடல் சிதறி பலி

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

அலேப்பா, ஜன. 17 - சிரியாவில் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

சிரியாவின் அலெப்போ நகர பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கின. இதற்காக அங்கு மாணவர்கள் திரண்டிருந்தனர். பல்கலைக் கழகத்தில் திடீரென்று இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 82 பேர் இறந்தனர். 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தகவலை அலெப்போ நகர் ஆளுனர் முகமது வாஹித் அக்காட் தெரிவித்தார். அரசு போர் விமானங்கள் வீசிய ஏவுகணைகள் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். எனினும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் இது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்