முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு பிடிவாரண்டு - நெல்லை கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

நெல்லை,ஏப்.18 - முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசிய வழக்கு விசாரணையில் ஆஜராகாத விஜயகாந்துக்கு நெல்லை கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாளை ஜவஹர் திடலில் கடந்த 2012ம் ஆண்டு தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசினார். இது குறித்து நெல்லை அரசு வக்கீல் முத்துக்கருப்பன் விஜயகாந்த் மீது நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 12ந் தேதி நடந்தது. இதில் ஆஜராக விஜயகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்               ஆஜராகவில்லை. இதையடுத்து அந்த வழக்கின் விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இதில் விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் வழக்கு விசாரணையில் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் ஜெயபாலன் தலைமையில் வக்கீல்கள் ஆஜராகி நீதிபதி கமலாவதியிடம் ஒரு மனு அளித்தனர். அதில் சட்ட சபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் விஜயகாந்த் ஆஜராக முடியவில்லை. மற்றொரு நாளில் அவர் ஆஜராவார் என்று கூறியிருந்தார். ஆனால் நீதிபதி கமலாவதி அந்த மனுவை தள்ளுபடி செய்து விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்