முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை மனைவி உள்பட 5 பேர் கைது

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

திருவள்ளூர், ஏப். - 30 - கடந்த சில தினங்களுக்கு முன் வேப்பம்பட்டில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரித்ததில்,வேப்பம்பட்டில் கட்டியிருக்கும் வீட்டுக்காக சென்னையில் வேலைபார்க்கும் அகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரின் நண்பரிடம் ரூ.2 லட்சம் பணம் கடன் வாங்கி இருந்தோம். கணவரின் நண்பர் தைரியநாதன் (38). கடனை கேட்க தைரியநாதன் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதனால் எனக்கும் (ஜோதி), தைரியநானுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் தைரியநாதனை என் வீட்டுக்கு வரவேண்டாம் என கூறினார். இதுமட்டும் இல்லாமல் இடம் வாங்கி தருவதாக பலபேரிடம் பணம் பெற்றுள்ளார்.  தினமும் பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து சண்டை போடுவார்கள். இதை தன்னுடைய கள்ளக்காதலன்  கூறினாராம். நேரம் வரும்போது சொல் என்றாராம் தைரியநாதன். கடந்த சில தினங்களுக்கு முன் தைரியநாதன் நண்பர்களுடன் வந்த செல்வகுமாரை தீர்த்து கட்டியுள்ளனர்.இவ்வாறு ஜோதி கூறியதாக போலீசார் கூறினர்.
கொலைக்கு உடந்தையாக இருந்த ஜோதி, கள்ளக்காதலன் தைரியநாதன், ரமேஷ் (25), ஜானகிராமன் (25), ரவீந்திரன் (24) ஆகிய 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்