எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.2 - அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் பிரபல மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடிவந்தனர்.பெங்களூரைச் சேர்ந்த இவர் தனது 19 வயதில் மோசடி வித்தைகளை தொடங்கினார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கைவரிசை காட்டி வருகிறார். அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேத்துப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலையாகி சென்னையில் தங்கி தனது மோசடி வேலையை மீண்டும் காட்டினார்.
சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்ல சிவம் புகார் அளித்த பின்னர்தான் சுகாஷ், மீண்டும் இங்கு பதுங்கி இருந்து மோசடி செய்வது அம்பலமானது. மோசடி மன்னன் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் நூலிழையில் போலீஸ் பிடியில் சிக்காமல் நழுவி ஓடிவிட்டார். அவர் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்ட நடிகை லீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, அவரை நம்பி நான் ஏமாந்து போனேன் என்று கூறினார்.
பெரிய டைரக்டர் என்று கூறி என்னுடன் அறிமுகமான சுகாஷ், முன்னணி நடிகையாக்குவதாக கூறியதால், அவரது காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன் என்றும் போலீசிடம் தெரிவித்துள்ளார். லீனாவை கருவியாக பயன்படுத்தி தலைமறைவாக உள்ள சுகாசை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். லீனா சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரும், தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் டெல்லியிலேயே முகாமிட்டு சுகாசை தேடிவந்தனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. அவர் எங்கு பதுங்கினார் என்பது மர்மமாக உள்ளது. இதையடுத்து நேற்று காலையில் தமிழக போலீசார் சென்னை திரும்பினர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் சுகாஷ் டெல்லியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். பக்கத்து மாநிலங்களில் நெருங்கிய நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது சுகாஷ் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் சுகாஷ் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுகாஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்த அவர், கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு சில வழக்குளில் மட்டுமே சுகாஷ் சிக்கியுள்ளார். தனக்குத்தானே பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு, விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தபடியே வலம் வந்துள்ள சுகாஷ், தனி ராஜாங்கமே நடத்தி வந்துள்ளார். சொகுசு பேர்வழியான சுகாஷ், எப்போதும் விதவிதமான கார்களிலேயே சுற்றி வந்துள்ளார்.
இதற்காக மோசடி பணத்தில் விலை உயர்ந்த கார்களையும், வாங்கி குவித்துள்ளார். இதே போல கைகெடிகாரங்கள் மீது சுகாசுக்கு அளவு கடந்த மோகம் இருந்துள்ளது. இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கைக்கெடிகாரங்களையும் வாங்கி வைத்திருந்தார். தினமும் விதவிதமாக கைக்கெடிகாரங்களை அணிந்து அழகு பார்த்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் கைவரிசை காட்டிய நேரத்தில் முதல்- அமைச்சர் வீட்டின் செல்லப்பிள்ளை நான், எனக்கு எல்லா மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது என்றும் சுகாஷ் கதை விட்டுள்ளார். இதை நம்பித்தான் பலர் ஏமாந்துள்ளனர்.
மோசடி பணத்தை தனது வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ள சுகாஷ், அதன் பின்னர் அதனை எந்தெந்த துறைகளில் முதலீடு செய்துள்ளார் என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஷேர் மார்க்கெட்டில் அவர் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுகாசின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.