எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லை மே.3 - நெல்லை அருகே முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ளது தளபதி சமுத்திரம் கீழுர். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த கோபால் பிள்ளை மகன் விஜய சங்கர்(42), சிறுமளஞ்சியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் ராஜா(39) ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரும் அங்கு இருந்துள்ளனர். நேற்று பகல் 12 மணியளவில் அம்பாசிடர் கார் ஒன்று வங்கிக்கு வந்துள்ளது. காரில் இருந்து முத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இறங்கியுள்ளார். அவர் நேராக வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த கேசியர் விஜய சங்கரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிளார்க் ராஜா அங்கு சென்று மர்ம நபரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் மர்ம நபர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து போன வாடிக்கையாள்கள் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சுதாரித்துகொண்ட மர்மநபர் அங்கிருந்து அவர் வந்த காரிலேயே ஏறி தப்பி ஓடி விட்டார். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் வங்கி சுவற்றில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி. விஜயேந்திரபிதரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஊழியர்களை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் பணத்தையோ, நகையையோ கொள்ளையடித்து செல்லவில்லை. பொதுமக்கள் திரண்டதால் மர்ம நபர் கொள்ளையடிக்காமல் தப்பி சென்றாரா என்பது தெரியவில்லை. இதற்கிடையே மர்ம நபர் வள்ளியூருக்கு அருகில் காரில் இருந்து இறங்கி தப்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற கார்டிரைவர் நாங்குநேரியை சேர்ந்த தாயப்பன் என்பவர் நாங்குநேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் போலீசாரிடம் மர்ம நபர் வாடகைக்கு அமர்த்தியதாகவும், தளபதி சமுத்திரம் சென்று வரவேண்டும் என்று கூறியதால் அங்கு சென்றேன்என்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னையும் மிரட்டியதால் அவரை மீண்டும் வள்ளியூர் பகுதியில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது வாக்குமூலம் திருப்தியளிக்காததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது காரில் வேறு யாரும் மர்ம நபர்கள் உடன்வந்திருந்தனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியது தெரிந்த பின்னரும் மர்ம நபரை மீண்டும் ஏன் காரில் ஏற்றிசென்றார் என்பதும் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்ததாக தெரியவில்லை. எனவே அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு தனிபட்ட விரோதம் ஏதும் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். விஜய சங்கர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் அவரோடிருந்த ராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் வங்கி சுவற்றிலும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மர்ம நபர் என்ன வகையை சேரந்த துப்பாக்கி பயன்படுத்தினார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.