எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே 8-
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இம்மாதம் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை கனிமொழி தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ம் தலைமுறையினருக்கான (2 ஜி.) தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறை சார்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தான் வழங்கியுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இழப்புக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழுப்பொறுப்பு என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆ.ராசா அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு ராசாவை கைது செய்து தங்கள் காவலில் எடுத்தனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் ஆ.ராசாவின் உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 9 பேரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயமடைந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி. பிறகு தெரிவித்தது. இருந்தாலும் அந்த ரூ.214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் இருவரையும் மே 6 ம் தேதி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(மே 6) இந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி, சரத்குமார் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் வாத பிரதிவாதங்கள் முடிவடையாத நிலையில் இந்த விசாரணயை நீதிபதி ஷைனி நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்றும் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது கலைஞர் டி.வி.யை கனிமொழிதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரே கவனிக்கிறார். இந்த கலைஞர் டி.வி.தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பால்வா குழுமத்திடம் இருந்து ரூ. 200 கோடியை பெற்றுள்ளது எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் அந்த டி.வி.யை நிர்வகிப்பவராக இருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் கட்டுப்பாடுகளையும் இயக்குபவர் கனிமொழிதான் என்றும் எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. அந்த கலைஞர் டி.வி.க்குத்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக பெற்ற நிறுவனத்தினரிடம் இருந்து ரூ. 200 கோடி சென்றது என்றும் லலித் வாதாடினார். இந்த ரூ.200 கோடி பரிமாற்றத்தில் கனிமொழிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். ரூ. 200 கோடி பணப் பரிமாற்றத்தில் கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் இருவருக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற குற்றவாளிகளைப் போல நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப வேண்டும் என்றும் லலித் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் கருணாநிதி குடும்பத்தினருக்கே இருப்பதால் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் கலைஞர் டி.வி.யில் உள்ளன. ஆனால் இந்த டி.வி.யின் நிர்வாக பணிகளில் அவர் தீவிரமாக எதிலும் ஈடுபடவில்லை. அந்த டி.வி.யை 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும், சரத்குமாரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இவற்றின் மீதான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கனிமொழியும், சரத்குமாரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


