முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரிலிருந்து கலவரம்: மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், டிச.22 - கலவரத்தில் ஈடுபட்டதாக சிங்கப்பூரிலிருந்து மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றப்ட்டனர். சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்ற இடத்தில் இந்தியா, வங்காளதேசம் உள் ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து

 பணியாற்றி வருகிறார்கள். அங்கு ஏற்பட்ட பஸ் விபத்தில் ஒரு தமிழர் உயிரிழந்தார், இதனால் அங்கு கலவரம் மூண்டது. பஸ், கார்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. கடைகள், ஹோட்டல்கள் சூறையாடப்பட்டன. 

கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சிங்கப்பூரில் கலவரம் மூண்டு ள்ளது. இதுபோன்று கலவரம் நடைபெறாமல் தடுக்க கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 52 தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூர் போலீஸ் கமிஷனர் ஜோஹீ தெரிவித்தார்.         

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்