எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.3 - இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்பவர் அவதூறு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி இரு தரப்பிலும் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை மறுத்த சீமான் தரப்பு வழக்கறிஞர் நடிகை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி விவரம் வருமாறு:-
விஜய்-சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் சமீபத்தில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் இயக்குநர் சீமான் என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி பழகினார். இதனால் நெருங்கி பழகினோம். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படிகேட்டு கொள்கிறேன் என்று தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் வளசரவாக்கம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த புகார் பற்றி நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த புகார் பற்றி சீமான் தரப்பில் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார். வழக்கறிஞர் தடா சந்திரசேகர் கூறியதாவது:-
சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளால் இன்னல் படும் இலங்கை தமிழர்களின் துயர்துடைக்க கடுமையாக பாடுபட்டு வருகிறார். தனது பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் அவர் பின்னே இளைஞர் கூட்டம் அணி திரள்கிறது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை ஒன்றையே தனது தனது போராட்டமாக கொண்டு வாழ்ந்து வரும் சீமானுக்கு காதலிக்கவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ நேரம் கிடையாது இதுபற்றி அவர் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.
சீமானுடைய புகழை கண்டு பொறுக்காதவர்கள் அவருக்கு களங்கம் கற்பிக்க இதுபோன்ற பொய் புகார்களை அளித்துள்ளனர். சீமான் திருமணம் செய்யகூட மறுத்து அரசியல் களத்தில் போராடி வருகிறார். தொண்டர்களும் நலம் விரும்பிகளும் கேட்டு கொண்டதால் திருமணம் செய்ய ஒத்து கொண்டார். மணப்பெண் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணாக இருக்கவேண்டும் என்று கூறியதால் அவ்வாறு பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை பேசி பெற்றோர்களும் சம்மதித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இது போன்ற பொய்யான புகாரை விஜயலட்சுமி மூலம் கொடுத்துள்ளனர். உண்மையில்லாத ஒன்றை புகாரை கொடுத்த நடிகை விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து விஜயலட்சுமியின் புகார் பொய்யென நிரூபிப்போம் என்று கூறினார்.
இதனிடையே இந்த புகாரை விசாரித்த போலீசார் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் புகார் பற்றி இயக்குநர் சீமானிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026


