முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைஜனாதிபதி அன்சாரிக்கு பிரதமர் நேரில் ரம்ஜான் வாழ்த்து

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 1 - ராம்ஜான் பண்டிகையையொட்டி துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் பெரும்மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இதனையொட்டி முஸ்லீம் மக்களும் இந்து மக்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். அவரும் ரம்ஜான் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதனையொட்டி ஹமீத் அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். அர்ப்பணிப்பு தன்மையையும் மகிழ்ச்சியை அனைத்து மக்களும் பகிரிந்து கொள்வதையும் ரம்ஜான் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ரம்ஜான் பண்டிகையானது அமைதி, முன்னேற்றம், ஒற்றுமையுடன் மக்ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தட்டும் என்று ஹமீத் அன்சாரி தனது ரம்ஜான் வாழ்த்தாக தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்