எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.- 23 - உத்திரபிரதேச மாநிலத்தை 4 ஆக பிரிக்க அம்மாநில அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு லோக்சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் லோக்சபை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா, கல்வி சீர்திருந்த மசோதா, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய மசோதா, குழந்தைகளை பாதுகாக்கும் மசோதா, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளன. பாராளுமன்றம் துவங்கிய முதல்நாளே இந்த பிரச்சனைகள் எதிரொலிக்க துவங்கிவிட்டன. லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு துவங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மீராகுமார், புகழாரம் சூட்டி அவர்களை நினைவுகூர்ந்தார். இந்த நிகழ்வு முடிந்த மறு நிமிடமே பலத்த சர்ச்சை கிளம்பியது. சபாநாயகர் மீராகுமார் சபை அலுவல்கள் தொடங்க கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து தங்கள் தங்கள் பிரச்சனைகள் எழுப்பினர். உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் தெலுங்கானா பிரச்சனையை கிளப்பினார்கள். இதற்கிடையில் கேள்விநேரத்தை தொடங்குமாறு சபாநாயகர் மீராகுமார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்க தமது இருக்கையில் இருந்து எழுந்தார். உடனே பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் இருக்கைகளில் இருந்த எழுந்தனர். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணிவரை லோக்சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லோக்சபை 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. சபையை அமைதிப்படுத்த சபாநாயகரால் இயலவில்லை. இந்த அமளிக்கிடையே பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சிவசேனா எம்.பி.க்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் பலமுறை கேட்டுக்கொண்டும் எந்த ஒரு கட்சியும் அமைதிகாக்கவில்லை. இதனால் நாள் முழுவதும் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்ற ராஜ்யசபையிலும் இதே நிலைதான் காணப்பட்டது. 11 மணிக்கு சபை கூடியதும், அவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அடுத்த நிமிடம் எதிர்க்கட்சியினர் எழுந்து கோஷங்களை முழங்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாமல் முதல்நாள் முற்றிலும் முடங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.