எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 5 - சிம்பு நடித்த `ஒஸ்தி' படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடக்கிறது என்று டி.ராஜேந்தர் கூறினார். இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒஸ்தி படம் வருகிற 8-ம் தேதி வெளியிட உள்ளோம். தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்கிறார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது. கோவை, திருப்பூர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போட்டி விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்தி கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இவர் சங்கம் நடத்தக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தும் அதை மீறி அவர் சங்கம் நடத்துவது எப்படி? ஒஸ்தி படத்தை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட ஒத்துழைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிப்பேன். தடைகளையெல்லாம் தகர்த்தெறியும் தைரியசாலி முதல்வர் ஜெயலலிதா. திரையுலகிலிருந்து அரசியல் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் நீங்கள், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு சென்று கொடியை ஏற்றியவர் நீங்கள், அப்படியிருக்க கலையுலகத்தின் கஷ்டங்களைப் பார்த்து உங்கள் கண்கள் திறக்காமல் இருக்குமா? கதறலைதான் உங்கள் காதுகள் கேட்காமல் போகுமா? ஒரு பக்கம் சின்னத்திரைகளின் வளர்ச்சி, மறுபக்கம் திருட்டு வீடியோவால் தளர்ச்சி, இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு மாநகரங்களில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி என்ற அதிர்ச்சி, கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால் கன்னடப் படங்களுக்கு முழு வரி விலக்கு. வாடும் எங்களுக்கு காட்டுங்கள் ஒரு வழி, பிரச்சினைகளால் பிதுங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் விழி. யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். நடித்து குறள் டி.வி. மூலம் வெளியாகவிருக்கும் ஒஸ்தி (யு தணிக்கை சான்றிதழ்) படத்துக்கும் ஏன் கிடைக்கக் கூடாது வரிவிலக்கு? உங்களிடத்தில் இந்த கோரிக்கை வைப்பதற்கு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன் உரிமை. சன் டி.வி. படத்தை வாங்கி விநியோகம் செய்கின்ற படங்களை சில திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தடை போடுவோம் என சொன்னார்கள். அதில்கூட இருந்திருக்கலாம் நியாயம். சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கூட கொடுத்தால் கூட தடை போடுவோம் என்பதை முன்கூட்டியே முறைப்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அறிவிக்கவில்லை. நான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை. வெளிப்படையாக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவில்லை. அப்படியிருந்தும் எங்கள் ஒஸ்தி படம் தணிக்கை செய்யப்பட்டு தேதியும் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து விளம்பரம் செய்த நிலையில் இப்போது தடை என்றால் ஒரு தயாரிப்பாளரின் நிலையையும், ஒரு விநியோகஸ்தரின் கதியையும் எண்ணிப் பாருங்கள்.
திரைப்பட உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் பாக்கி என்றால் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்படி காவல் துறையிடம்கூட முறையிட்டு சிலர் பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்க, இனிமேல் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கொடுக்கும் படங்களுக்கு எதிர்காலத்தில் தடை போடுவோம் என்று சொல்லுங்கள். இப்பொழுது இந்தப் படத்துக்கு நிதி உதவியளித்த ரிலையன்ஸ் நிறுவனம் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை விற்றிருக்கிறது. திரையரங்க உரிமையாளரோடு சன் டி.வி.க்கு பிரச்சினை என்றவுடன் சன் டி.வி.யை தீர்வு காணுங்கள். இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும் என்றுகூட அறிவித்திருக்கிறது. அதுவும்கூட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதையும் மீறி சன் டி.வி.யோடு திரையரங்க உரிமையாளர் சங்கம் போட்டுக் கொண்டிருக்கிறது குஸ்தி. அதில் இடையில் மாட்டி சிக்கித் தவிக்கலாமா ஒஸ்தி?
விளம்பர செலவோடு சேர்த்து பல கோடிகளுக்கும் மேல் விலை கொடுத்து வாங்கியிருக்கும் குறள் டி.வி.யின் நிலை என்ன? இந்த நாட்டிலே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. விநியோகஸ்தர் சங்கம் இருக்கிறது. திரைப்பட உரிமையாளர் சங்கம் இருக்கிறது. பத்தும் பத்தாததற்கு போட்டி சங்கங்களும் இருக்கிறது. எல்லாம் இருந்தும் நாங்கள் எங்கே போய் கேட்க முடியும் நியாயம்? இத்தனை கோடி செலவு செய்த தயாரிப்பாளரும், பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கிய விநியோகஸ்தருமாகிய நாங்கள்தான் பட்டிருக்கிறோம் காயம்.
உலகிலேயே ஒசத்தி ஒரே சக்தி அது ஓம் சக்தி. வெளியிடுவதற்கு அவர் தருகிறார் யுக்தி. அந்த ஆண்டவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட வேண்டும். இந்த படம் வெளியாகவிருக்கும் எட்டாம் தேதி திருவண்ணாமலை தீபம். அந்த அண்ணாமலையாரின் அருள் இருக்கும் வரை ஒஸ்திக்கு கிடைக்கும் உச்ச லாபம். இது ஒரு ஆன்மீகவாதியாகிய என்னுடைய நம்பிக்கை.
ஆண்டவன் தான் திறக்க வேண்டும் நடை, முதல்வர் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும் நல்ல விடை, அதையும் மீறி யார் போடுவார்கள் தடை.
இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.