முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேயின் சிறை நிரப்பும் போராட்டம் இதுவரை 50 ,000 மேற்பட்டோர் பதிவு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 25 - அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ள இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி வருகின்ற 27-ம் தேதி மும்பையில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். இதனையடுத்து வருகின்ற 30-ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் இண்டர்நெட் முகவரியிலும் பதிவு செய்யலாம் என்று போராட்ட ஆதரவு இயக்கமான ஊழல் எதிர்ப்பு இந்தியா என்ற அமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக 51 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று ஊழல் எதிர்ப்பு இந்தியா என்ற அமைப்பு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்